Monday 6th of May 2024 02:45:01 AM GMT

LANGUAGE - TAMIL
-
லங்கா பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றது யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ்!

லங்கா பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றது யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ்!


லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் காலி கிளடியேடர்ஸ் அணியை யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றிருந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காலி கிளடியேடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது.

இதனால் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 53 ஓட்டங்களால் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.


Category: விளையாட்டு, புதிது
Tags: யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE